காதல் கடிதம் எழுதுவது எப்படி..?

சமைத்த உணவை அழகாய் அலங்கரித்து உணவு மேஜையில் வைத்தாலே அதை உண்ணும் ஆவலை ஏற்படுத்தும் அதேபோல மனங்கவர்ந்தவருக்கு எழுதிய கடிதத்தை கொடுப்பதில் கூட கற்பனை உணர்வு இருக்கவேண்டும்.

காதல் உணர்வுகளை கடிதத்தில் கொட்டியாகிவிட்டது. அதை எப்படி, எங்கே கொடுப்பது என்ற தயக்கம் பலருக்கும் உண்டு. சாதரணமாக நான்காக மடித்து நீட்டுவதை விட அதையே கிரியேட்டிவாக செய்தால் உங்கள் காதலுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்கின்றனர் காதல் எக்ஸ்பர்ட்கள்.

கண்ணாடி குடுவை, காதல் கடிதம்

அழகான கண்ணாடி குடுவையில் சின்னதாய் ஒரு சிவப்பு ரோஜா அதில் சுருட்டப்பட்ட கடிதம். அதனை மூட இதய சின்னம் வரைந்த கார்க் வைத்து அடைக்கப்பட்ட மூடி, அந்த பாட்டிலை சிவப்பு நிற ரிப்பனால் கட்டி உங்கள் மனங் கவர்ந்தவரிடம் கொடுத்துப் பாருங்கள் அப்புறம் பாருங்கள் உங்களவரின் முகம் வெட்கத்தில் சிவக்கும்.

ஒலிப்பதிவு கடிதம்

உருகி உருகி கடிதம் எழுதியிருந்தாலும், ஒலிப்பதிவு நாடாவில் உங்களுடைய குரலை பதிவு செய்து அந்த டேப்பில் உங்கள் கடிதத்தை அழகாக சுற்றி பரிசளிக்கலாம்.

அதோடு மனதிற்கு பிடித்த காதல் பாடல்களை அந்த ஒலிப்பதிவு நாடாவில் பதிந்து அதோடு கடிதத்தை கொடுத்தால் அதற்கு கிடைக்கும்

என்னா மரியாதை, என்னா மரியாதை…

இதயம் கவர்ந்தவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசிப்பதை விட அதிகம் உபயோகிக்கும், அவர்கள் அதிகம் விரும்பும் பொருட்களை நாம் பரிசளித்து நம் காதலை உணர்த்தலாம். குட்டித் தலையணை, அதிகம் தொடும் பேனா, விரல் தொடும் செல்போன் என மனங்கவர்ந்தவர் அதிகம் உபயோகிக்கும் பொருட்களை வாங்கி அதில் காதல் கடிதத்தை வைத்து பரிசாக தரலாம். இது மனங்கவர்ந்தவரின் முகத்தில் மின்னல் ஒளியை தெரிக்கச் செய்யும்.

புத்தகம் உணர்த்தும் நேசம்

உங்களவர் புத்தகப் பிரியர் எனும் பட்சத்தில் அவருக்கு மிகவும் பிரியமான எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை வாங்கி அதில் ஒரு வரியில் உங்களின் காதலை உணர்த்தும் வகையில் எழுதி பரிசளிக்கலாம்.

காதலரியை நினைக்கும்போது ஒவ்வொருவருக்கும் கவிதை அருவி மாதிரி கொட்டும். ஆனால் அதை எழுத நினைக்கும்போது வார்த்தை வராது…அதுதான் காதல். அதற்காக அப்படியே விட்டு விட முடியாது இல்லையா… முயலுங்கள், முடிந்தவரை அழகியலோடு காதலை வார்த்தைகளால் உணர்த்துங்கள்.

ஆல் தி பெஸ்ட்..