முருங்கைக்காயை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இது, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய். கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும்.

முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்கைக்காய் நீக்குகிறது. பசியை அதிகரிக்க உதவுகிறது.

முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஏ‘ மற்றும் ‘சி‘ ஆகிய சத்துகள் உள்ளன. முருங்கைக்காயை ‘சூப்’ செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். முருங்கைக்காயை வேக வைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

முருங்கைக்காய் சாறை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு அதிகரிக்கும்.