தம்பதிகளுக்குள் சண்டை வர முக்கியக் காரணம் என்ன தெரியுமா..?

தம்பதிகளுக்குள் ஏற்படும் சண்டைகளுக்கான காரணிகளில் மாமியார்களும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்களாம்.

பணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, வேலை தொடர்பான பிரச்சினை என பல பிரச்சினைகளை மையமாக் வைத்து கணவன், மனைவி இடையே சண்டை மூண்டாலும் கூட மாமியார் பிரச்சினையும் முக்கியமானதாக இருக்கிறதாம்.

இந்தக் கதை இங்கிலாந்துக் கதை. அந்த நாட்டில் குடும்பச் சண்டைகள் பலவற்றுக்கு மாமியார் -மருமகள் மோதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு.

2000 தம்பதிகளிடம் இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தினர். அதில் சம்பளப் பிரச்சினை, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சண்டைகளுக்குக் காரணமாக இருந்தாலும் மாமியார் பிரச்சினையும் முதன்மையானதாக இருக்கிறதாம்.

பிலிப்ஸ் நிறுவனம்தான் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. தங்களுக்கு வீட்டில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் எப்போதும் பதட்டமாகவும், கோபத்தோடும் இருக்க நேரிடுவதாக பல பெண்கள் கருத்து தெரிவித்தனராம்.

குடும்பப் பெண்களுக்கு ஏற்படும் பத்து முக்கியப் பிரச்சினைகளாக குடிப் பழக்கம், துணி துவைப்பது, டிவியில் என்ன பார்ப்பது என்பதில் வரும் சண்டை ஆகியவை முக்கிய இங்களைப் பிடித்துள்ளன.

சில வீடுகளில் தம்பதிகளுக்கிடையே தினசரி சண்டை மூளுகிறதாம். 20ல் ஒரு ஜோடி, தினசரி பலமுறை சண்டை போடும் ஜோடிகளாக உள்ளனராம்.

சினனச் சின்ன பிரச்சினையைக் கூட பல வீடுகளில் பெரிதாக்கி பெரும் சண்டை போடுகிறாராக்ளாம். டிவி ரிமோட்டை கையில் வைத்திருப்பது தொடர்பாக பலரது வீடுகளில் போர் வெடிக்கிறதாம். தலையைத் துவட்டி விட்டு துணியை ஆங்காங்கே போடுவது தொடர்பாக சண்டை போடுகிறார்களாம். வெளியில் கிளம்புவதற்கு டைம் ஆனால் கூட சில ஜோடிகள் பெரும் சண்டையில் இறங்கி விடுகிறார்களாம்.

நம்ம ஊரில் மாமியார்களும், மருமகள்களும் சண்டைகளை மூட்டை கட்டி விட்டு ஜாலியாக வாழ ஆரம்பித்து விட்டனர். இங்கிலாந்தில் இப்போதுதான் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள் போல..!