இந்த மந்திரத்தை 48 நாட்கள் சொல்லுங்க.. தங்கம் வாங்கும் யோகம் தானா கிடைக்கும்..!

கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் மட்டும் போதாது. தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற குறிக்கோள் உங்களுடைய மனதில் இருந்து ஒரு துளி கூட குறைக்கக்கூடாது.

நீண்ட நாட்களாக ஆசைப்பட்டும் உங்களால் தங்கத்தை வாங்கி சேர்க்க முடியவில்லையா? வாங்கி வைத்த தங்கமும் வீட்டில் தாங்காமல் அடகுக் கடைக்குப் போய்க் கொண்டே இருக்கின்றதா? உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியான பரிகாரம் தான் இது. உங்களால் முடிந்தால் சுவர்ண கணபதி திருவுருவப்படத்தை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்து இந்த பூஜையை செய்யலாம். முடியாதவர்கள், வெறும் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அந்த மஞ்சள் பிள்ளையாரை கணபதியாக நினைத்துக்கூட, இந்த பூஜையை செய்யலாம். தவறொன்றும் கிடையாது.

வெற்றிலையின் மேல் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து விட்டு, அவருக்கு அருகம்புல்லால் அலங்காரம் செய்து 48 நாட்கள், இந்த மந்திரத்தை சொல்லி பூஜை செய்ய வேண்டும். அதன் பின்பாக லட்சுமி கணபதி என்று சொல்லப்படும் சுவர்ண கணபதியை உங்களுடைய வீட்டில், ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில் ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பாக, கணபதியின் இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்குங்கள். தினந்தோறும் வெறும் 11 முறை உச்சரித்தால் கூட போதும்! உங்களுக்காக சுவர்ண கணபதியின் மூல மந்திரம் இதோ!

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா!

கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டும் போதாது. தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற குறிக்கோள் உங்களுடைய மனதில் இருந்து ஒரு துளி கூட குறைக்கக்கூடாது. நிச்சயம் 48 நாட்கள் முடிவதற்குள் உங்கள் வீட்டிற்கு ஒரு குண்டுமணி தங்கமாவது வந்து சேரும் என்பதில் சந்தேகமே கிடையாது. அடமானம் வைத்து இருந்தாலும் அந்த நகையை மீட்டெடுப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருங்கள். அந்த நகையும் கூடிய விரைவில் உங்கள் கைக்கு வந்து சேரும்.